(சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்)
சாரதி அனுமதி பத்திரம் பெற்று கொள்ளுவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளை கணனி மயப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கான பணிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கு 143 கணனிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.