• Sun. Oct 12th, 2025

பஸ் கட்டண திருத்தம் குறித்த கலந்துரையாடல்

Byadmin

Jan 9, 2023

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு இன்று காலை 10.00 மணிக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மேலும் கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டண குறைப்பை எதிர்பார்க்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *