• Sun. Oct 12th, 2025

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாகூப்

Byadmin

Sep 12, 2017

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்திருந்தார்.

இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து, முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் ஹலிமா யாக்கோப் மட்டுமே ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் உள்ளார். இதன்மூலம் அவர் ஒருமனதாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *