ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான தேவையான உதவிகளைசெய்ய அந்நாட்டு அரசு பெயரளவில் சில நடவடிக்கைகளைஎடுத்து வரும் நிலையில் புத்த மதத்தினர் ஒன்று திரண்டுநிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என போராட்டத்தில்ஈடுபட்டனர்.
மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் மீதுதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்தஇனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4லட்சத்துக்கும்
அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த மியான்மர்நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி தன் மீதான சர்வதேசவிமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில் கடந்தசெவ்வாய்க்கிழமை டெலிவிஷனில் உரையாற்றினார்.
அப்போது அவர் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலைதிரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்குஉள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு மனித நேய உதவிகள்வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.
அதன்படி ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒருபடகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின்தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர்நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா
முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்புகம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்குபெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார்குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரணபொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல்குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும்மோதல் வெடித்தது.
இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால்சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில்ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
முன்னதாக நேற்று செஞ்சிலுவை சங்கத்தினர் உதவிக்காக சென்ற படகு பங்களாதேஷ் பகுதியில் விபத்துக்குள்ளாகி 9 அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.