• Sat. Oct 11th, 2025

விநியோகிக்க விருந்த பாய்கள் மீட்பு

Byadmin

May 2, 2025

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பொதிகளும், 1400 படுக்கை விரிப்புகள் கொண்ட 14 பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஸ்வர்ணபுரி. கிராமத்தில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் ஏராளமான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த வீட்டை வியாழக்கிழமை (1) சோதனை செய்தனர்.

இந்த பொருட்கள் அனைத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர், மேலும் சம்பவத்தில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *