• Sun. Oct 12th, 2025

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி 27 இல் தேர்தல்

Byadmin

Oct 25, 2017

வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம்

க­லந்­து­ரை­யா­டலின் போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வ­ரிக்கு பின்­னரும் காலம் ­தாழ்த்­தக்­கூ­டாது என அனைத்து தரப்­பி­னர்­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பாக, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மாக தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது அனைத்து தரப்­பி­னர்­களும் தேர்­தலை நடத்­த­வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றனர்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாக தாம­தப்­பட்டு வந்த உள்­ளூ ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபாவினால் அடுத்­த­வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு வேட்­பு­மனு கோரல் மற்றும் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான திக­தியை அறி­விக்­க­வுள்­ளது. கட்­சித்­த­லை­வர்களின் கலந்­து­ரை­யா­டலில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்ட திக­தி­யையே தேர்­தல்கள் ஆணைக்­குழு பெரும்­பாலும் தீர்மானித்துள்ளதாக உயர்­மட்ட வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது.

கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற அமர்வு நடை­பெற்­ற­போது, உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்ந்தும் கால­தா­ம­தப்­ப­டு­வது குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதன்­போது நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி தேர்தல் சட்­டங்­களில் சிங்­கள, ஆங்­கில மொழி­களில் காணப்­படும் சில வேறு­பா­டு­களின் கார­ண­மாக வர்த்­த­மானி அறி­வித்தல் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தா­கவும் அவற்றில் சில திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தோடு அதற்­காக சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை பெற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை பிரிப்­பது போன்ற சில விடங்கள் நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் எவ்­வா­றா­யினும் இவ்­வி­டயம் குறித்து கட்­சித்­த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார்.

அதற்­க­மை­வாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் கட்­சித்­த­லை­வர்கள் பங்­கேற்ற விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்­தபா, ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் அக்­கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறி­பால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான  மனோ­க­ணேசன்,  அமைச்சர் ப.திகாம்­பரம், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் அநு­ர­கு­மார திஸ­ாநா­யக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சி­யின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் தமிழ்த் தேசியக் கூட்­டப்பு பங்­கேற்­றி­ருக்­க­வில்லை என்­ப­தோடு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலைவர் தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தேர்­த­லுக்­கான வலி­யு­றுத்து
இவ்­வா­றான நிலையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலின் போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வ­ரிக்கு பின்­னரும் காலம்­தாழ்த்­தக்­கூ­டாது என அனைத்து தரப்­பி­னர்­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பாக இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மாக தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது அனைத்து தரப்­பி­னர்­களும் தேர்­தலை நடத்­த­வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றனர். ஆகவே அதில் காணப்­படும் தாம­தங்­களை உட­ன­டி­யாக நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்­டனர்.

சட்­டமா அதிபர் மீது சாடல்
இதன்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்தச் சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதும் சிங்­கள, ஆங்­கில மொழி­களில் சில வேறு­பா­டுகள் காணப்­ப­டு­வதால் அவற்றில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ள­தாக அமைச்சர் பைஸர் முஸ்­தபா குறிப்­பிட்­டுள்­ள­தோடு சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை பெற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து கட்­சிப்­பி­ர­தி­நி­திகள், சட்ட மா அதிபர் தரப்பில் பலத்த தாம­தங்கள் நில­வு­கின்­றன. குறிப்­பாக அத்­தி­ணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் நத்தை வேகத்­தி­லேயே செல்­கின்­றன என்ற தொனியிலான கருத்­துக்­களை பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ளனர்.

துரி­த­மாக மேற்­கொள்ள வேண்டும்
இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்­தச்­சட்­டங்­களில் காணப்­படும் சிறு திருத்­தங்­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்­கு­ரிய அறி­வுறுத்­தல்­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய முதற்­கட்ட தயார்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­துள்­ள­மையையும் குறிப்­பிட்டார்.

கூட்­ட­மைப்­புக்கு தொலை­பேசி அழைப்பு
இத­னை­ய­டுத்து நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களில் தேர்­தலை ஜன­வரி மாதம் எத்­த­கைய காலப்­ப­கு­தியில் வைப்­பது என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டது. முதலில் ஜன­வரி மாதம் 20ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வ­தெ­னவும் அதற்கு முன்­ன­தாக சட்­ட­ரீ­தி­யான மற்றும் ஏனைய விட­யங்­களை முன்­னெ­டுத்து விரைந்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வது என்று அனை­வ­ராலும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் எம்.பியை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு 20ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வதில் தங்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சி­னைகள் இருக்­கின்­றதா? ஏன வின­வி­யுள்ளார்.

தொலை­பேசி உரை­யா­டலின்  பின்னர் கட்சி தலை­வர்­க­ளி­டத்தில் பிர­தமர் கூறு­கையில்,  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அத்­தி­க­தியில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எவ்­வி­த­மான எதிர்ப்­புக்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. அவர்­களும் விரைந்து தேர்­தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றனர் என்றார்.

ஈற்றில் இறு­தி­யான ஜன­வரி 27
இவ்­வா­றான நிலையில் தொடர்ச்­சி­யான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. இத­ன­டிப்­ப­டையில் ஜன­வரி மாதம் 20ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வ­த­னையும் பார்க்கில் ஜன­வரி மாதத்தின் கடைசி வாரத்தில் அதா­வது 27ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வதே சிறந்­த­தாக அமையும் என்ற யோசனை கூட்­டத்தில் இருந்­த­வர்­களால் முன்­மொ­ழி­யப்­ப­டவும் விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் பைஸர், பிர­தமர் ரணில் உட்­பட அனைத்து தரப்­பி­னரும் அத்­தி­க­தியில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் வெளி­யிட்­டனர்.
இத­னை­ய­டுத்து மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைசர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன.  இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம் வெளி­யி­டப்­படும். அதற்கு முன்­ன­தாக திருத்­தச்­சட்­டத்தில் காணப்­படும் குறை­பா­டு­களை நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை அம்­ப­க­முவ தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்­கான இணக்­கப்­பாடும் எட்டப்­பட்­டுள்­ளன. அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்றார்.

அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல
தெரி­விக்­கையில், 

ஜன­வரி இறுதி வாரத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­க­னவே இந்த நிலைப்­பாட்­டி­லேயே இருந்­தது. ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி மீது வீணான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­னார்கள். ஐ.தே.க என்­றுமே தேர்­த­லுக்கு அஞ்­ச­வில்லை. எந்­நே­ரத்­திலும் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே உள்ளோம் என்றார்.

இதே­வேளை, ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் சார்பில் கலந்து கொண்ட அக்­கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி, 
வட­மா­கா­ணத்தில் மரு­தங்­கேணி, கண்­டா­வளை, ஒட்­டி­சுட்டான், மடு இந்த நான்கு பிர­தே­சங்­களும் மிகப் பெரி­யவை மற்றும் மிகவும் பின்­தங்­கி­ய­வை­யாகும். இங்கு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உள்­ளூ­ராட்சி சபைகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மானிப்பாய், சுன்னாகம். சங்­கானை, நெல்­லி­யடி ஆகி­ய­வற்­றுக்­கான நகர சபைகள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.

கிளி­நொச்சி ஒரு மிகவும் பெரிய நக­ரர்கும். இது சுமார் 4 கி.மீ. தூரம் பரந்தன் முதல் முறி­கண்­டி­வரை பரந்து உள்­ளது. இது கரைச்சி பிர­தேச சபையால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. இந்த சபையால் கிளி­நொச்சி நக­ரத்தின் தேவை­களை பூர்த்­தி­செய்ய முடி­யாமல் உள்­ளது.

கரைச்சி பிர­தேச சபை கண்­டா­வளை பிர­தேச செய­ல­கத்­தையும் நிர்­வ­கிக்­க­வேண்டி உள்­ளது. உங்­க­ளுக்கு ஒன்று கூற விரும்­பு­கின்றேன். அதா­வது 1991ஆம் ஆண்­டுக்கு முன்னர் கிளி­நொச்சி நகர சபை­யா­கவே இயங்கி வந்­தது. மேலும் கிளி­நொச்சி நகர்தான் கிளி­நொச்சி மாவட்­டத்தின் நிர்­வாக நகர். இது விவ­சாய, வர்த்­தக, நிதி மற்றும் கல்வித் துறை­க­ளுக்கு வட­மா­கா­ணத்தில் உள்ள ஒரு மைய­மாகும்.

முல்­லைத்­தீவு நகரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் நிர்­வாக நக­ராகும். இதுவும் 1991ஆம் ஆண்­டிற்கு முன்னர் நக­ர­சபை அந்­தஸ்தை அனு­ப­வித்­தது. இதே போல் மானிப்பாய், சுன்­னாகம், சங்­கானை, நெல்­லி­யடி நகர்­களும் 1991ஆம் ஆண்­டிற்கு முன்னர் நக­ர­சபை அந்தஸ்தைக் கொண்­டி­ருந்­தன.

இவை ­யாவும் இன்று நன்கு வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளன. இங்­கெல்லாம் நகர சபை நிர்­வாகம் அமை­யா­ததால் நக­ரங்­களின் தேவை­களும் சேவை­களும் மிகவும் பின்­தங்கிக் காணப்­ப­டு­கின்­றன. எனவே இங்கு மேலே கூறப்­பட்ட பிர­தேச சபை­களை வர­வுள்ள தேர்­த­லுக்கு முன் தரம் உயர்த்தி நகர சபை­க­ளாக மேம்­ப­டுத்த வேண்டும்.

யாழ். நக­ரமே வட­மா­காணத்திலுள்ள ஒரே­யொரு மாந­கர சபை­யாகும். ஆதலால் இத்­த­ரு­ணத்தில் மிகவும் வேக­மாக வளர்ந்து வரும் மற்றும் சகல துறை­க­ளிலும் அபி­வி­ருத்தி கண்­டு­வரும் வவு­னியா நகரை மாந­கர சபை­யாக தரம் உயர்த்த வேண்­டு­கின்றேன். இத் தர­மு­யர்த்தல் இந் நகரை மேலும் வளர்ச்­சி­ய­டையச் செய்யும். அங்­குள்ள மக்­களும் மிக உயர்ந்த சேவை­களைப் பெற­மு­டியும்.
கிழக்கு மாகா­ணத்தில் மாகாணத் தலை­ந­க­ரான திரு­கோ­ண­ம­லையை மாந­கர சபை­யாகத் தரம் உயர்த்­து­வ­தோடு செங்­க­லடி, கள­வாஞ்­சிக்­குடி, மூதூர், கிண்­ணியா போன்ற பிர­தேச சபை­களும் நகர சபை­க­ளாக தரம் உயர்த்­தப்­பட வேண்டும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கோர­ளைப்­பற்­று-­மத்தி, கோர­ளைப்­பற்று (வாழைச் சேனை), ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு பிர­தேச சபைகள் இன்னும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. இங்கே பிர­தேச சபைகள் இன்­மையால் உள்­ளூ­ராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்­ப­டு­கின்­றன.

கல்­முனை நகரில் சாய்ந்தமருது பிர­தேச மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் வேளையில் அங்­குள்ள தமிழ்ப் பிர­தேச மக்­களின் பிரச்­ச­ினை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட வேண்டும். இந்தத் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களும் துன்­பங்­களும் நீண்ட கால­மா­கவே தீர்க்கப்படாமல் உள்ளன.

தெற்கில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்தைப் பிரதேச சபையாக்குமாறும் மற்றும் அக்குரஸ்ஸ, தெனியாய, ஹக்மன போன்ற நகர்களை நகர சபையாக்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம், தரமுயர்த்தல் சம்பந்தமாக ஐம்பதிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் முடிவு காணப்படாமல் நீண்ட காலமாகத் உள்ளூராட்சி  அமைச்சிடம் உள்ளதாக அறிகின்றேன்.

அண்மையில்  15 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் உள்ளூராட்சி சபைகள் அமைக்கவும், தரம் உயர்த்தவும் தகுதிகள் யாவை என வரையறுத்துள்ளதாக அறிகிறேன். ஆனால், இக் குழு மிகவும் பின்தங்கிய, மக்கள் அடர்த்தி குன்றிய பிரதேசங்களான வடமத்திய மாகாணம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளது.
இக்குழுவில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் கிடையாது. இவர்களின் பரிந்துரைகள் மேற்கூறப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. ஆகவே இவை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு இதற்காக உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தாமதப்படுத்தாது கொள்கையளவிலான இணக்கப்பாட்டை வெளியிடவேண்டும் என்பதோடு இக்கோரிக்கைகளை காலவோட்டத்தில் படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *