• Sat. Oct 11th, 2025

கூட்டு எதிர்க்கட்சி தனித்தே போட்டியிடும். சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு பதிலடி

Byadmin

Oct 31, 2017

கூட்டு எதிர்க்கட்சி தனித்தே போட்டியிடும். சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு பதிலடி

தற்போது வரை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச  தனது இந்திய விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியதும் இது பற்றி தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை – வியலுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, குமார வெல்கம மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பாதுகாக்க எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக, அக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *