(இன்றும் மழையுடன் கூடிய காலநிலை)
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும்(28) மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், கிழக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை,பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.