• Sun. Oct 12th, 2025

அரசின் மீது முஸ்லிம்கள், நம்பிக்கை இழந்துள்ளனர் – கபீர் ஹாஷிம் பகிரங்க பேச்சு

Byadmin

Jun 13, 2017
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.
 இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும்  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கும் பொலிஸார் அதி­கா­ரத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் தாக்­கு­தல்கள் தொடர்­பாக  வின­விய போதே அமைச்சர் Vi ­க்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இந்த நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அர­சாங்கம் என்ற வகையில் நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். அண்மை கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பல வர்த்­தக நிலை­யங்­களும் தொழிற்­சா­லை­களும் பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்டும் தீயிட்டு கொழுத்­தப்­பட்டும் உள்­ளன.
எனவே இந்த விடயம் தொடர்­பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் பேசினோம். இதன்­பி­ர­காரம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கு அர­சாங்கம் பூரண நட­வ­டிக்‍கை எடுக்கும் என்றும்  இதற்­கான பூரண அதி­கா­ரத்தை பொலி­ஸூக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் எம்­மிடம் குறிப்­பிட்டார்.
எனினும் இந்த விடயம் காலம் கடந்தும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை. எனவே பொலிஸார் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் பாது­காக்க வேண்டும். அதற்­கான பூரண அதி­காரம் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.
முஸ்­லிம்கள் மீதான தொடர் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் நட­வ­டிக்கை எடுக்­கா­த­மையின் கார­ண­மாக அர­சாங்­கத்தின் மீது நாம் நம்­பிக்கை இழந்­துள்ளோம். நாட்டில் வாழும் முஸ்­லிம்­களும் அர­சாங்­கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே அரசாங்கம் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *