• Sat. Oct 11th, 2025

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

Byadmin

Nov 13, 2017 ,

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் சிறப்புப் பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் இதுவரையில் கிடைக்க வில்லை என நுகர்வோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கையில்; குறித்த இந்தப் பலன் நுகர்வோருக்குக் கிடைப்பதற்கு இன்னும் சில நாட்கள் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.

அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியி­டப்­ப­ட­வில்லை. அடுத்த வார­ம­ள­வில் வர்த்­த­மானி வெளி­யி­டப்­ப­டும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விலை குறைக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சிப் பொருட்களுக்கான புதிய விலை நிர்­ண­யிப்­ப­தற்­கு­ரிய ஆரம்ப கட்டப் பேச்சு தற்­ச­ம­யம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­து­டன், நுகர்­வோர் அதி­கார சபை­யி­னால் விலை­கள் குறித்து இறு­தித் தீர்­மா­னம் எடுக்­கப்­படவுள்­ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *