• Sat. Oct 11th, 2025

Month: July 2018

  • Home
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா

(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவுசெய்யப்பட்டாா். அவரது இல்லத்தில் நேற்று (24)  புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ.ல சு கட்சி முஸ்லிம்…

இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி

(இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி) அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அங்கத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கு அரசியல்துறை தொடர்பாக இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவதற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் தயாராக இருப்பதாக  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளரும் மற்றும்…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு

(ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு) ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (21) சனிக்கிழமை காலை கொழும்பு – 05நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. போரத்தின்…

இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்

(இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்) இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள் யப்பான் கம்பணியில் அனுசரனையுடன்  உற்பத்தி செய்து  2020 ஆம் ஆண்டில் அறிமுக்பபடுத்தப்பட உள்ளது. இதற்காக 2018 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்ப்பட்ட சுற்றுலாப்பிராயண நட்பு ரக்-ரக் என்ற திட்டத்தின் கீழ்…

புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு

(புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு) புதிய தேர்தல் முறையில் சிறுபான்மைக்கு பாதிப்பை தவிர்க்க தலையிடுமாறுகோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல்ஒன்றை நடத்தவுள்ளதாக  பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்குமுன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், புதிய கலப்பு தேர்தல்  முறையில் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்று சுட்டிக்காட்டப்பட்டது.புதிய  தேர்தல்முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்‌ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில்வாக்களித்திருந்தது. புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பதைஅன்றே நாம் சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாக வாக்களித்தசிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றனர்.இன்றுபாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்தஅணியின் உதவியை கொண்டே மிக இலகுவாக  மீண்டும் பழைய முறையில்தேர்தலை நடத்த செய்ய முடியும். எனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை  நிவர்த்திசெய்ய உதவக்கோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கியகலந்துரையாடல் ஒன்றை  எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜனபெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல்சத்தார் குறிப்பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை

(அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை) அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வதுதிருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம்வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்புநேற்று பத்­த­ர­முல்லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத்தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரப்­போ­வ­தில்லை. மாறாக வடக்­கி­லுள்ள மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கே புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக கதை­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. மேலும் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்தநல்­லாட்சி அர­சாங்கம் வடக்கில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ள­வில்லை. அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்தச் சட்டம் கொண்­டு­வர வேண்­டியஅவ­சியம் இல்லை. ஏனெனில் அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வ­தற்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பு சபை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தே­சத்­திடம் தெரி­வித்­துள்ளார். அவ்­வா­றெனின் ஏன் அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்தச் சட்­டத்தைகொண்டுவர முனைய வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில்மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் அங்கம் வகிக்­கி­றது. ஆகவே வழி­ந­டத்தல்குழு­வி­லேயே அது குறித்து பேசித் தீர்­மா­னித்­தி­ருக்­கலாம். அத­னை­வி­டுத்துஇரு­ப­தா­வது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை. ஆகவே நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றப்­போ­வ­தில்லை.வடக்­கி­லுள்ள மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கே புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ர­வுள்­ள­தான கதை­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது.மேலும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. தற்­போதும் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளையேமேற்­கொள்­கி­றது. மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்­கின்ற நிலைப்­பாடு அர­சாங்­கத்­திடம் இல்லை. இந்­தியப் பிர­தமர் இணைய வழி­மூலம் நேர­டி­யாகபேசு­வ­தென்­றாலே யாழ்ப்­பாணம் செல்லும் ஞாபகம் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் வரு­கி­றது. இல்­லை­யென்றால் அவர்கள் அங்கு செல்­வ­து­மில்லை,அப்­பி­ர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­து­மில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் ஒரு­போதும் பதாளஉலகக் குழுக்­களை இணைத்­துக்­கொண்டு ஆட்சி நடத்­த­வில்லை. ஆனால் தற்­போ­தைய நிலை எவ்­வா­றுள்­ளது என்­பது அனை­வ­ருக்கும் நன்கு தெரியும். அத்­துடன் தற்­போ­தைய ஜனா­தி­பதி, தான் இரவு பத்து மணிக்கு உறக்­கத்­திற்குச்சென்று காலை எட்டு மணிக்கு எழுந்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.எனினும்வேறு நாடு­க­ளி­லுள்ள அர­சியல் தலை­வர்கள் நீண்ட நேரம் பணி­யாற்­று­வதனை அறிந்­து­கொள்ள முடி­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ24 மணி நேரமும் நாட்­டுக்­காக சேவை­யாற்­று­ப­வ­ராக இருந்தார். மேலும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு அக்­கு­ழுவின் அறிக்­கைக்குஇணங்க அர்ஜுன் அலோசியஸ் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.ஆகவே அதுகுறித்து பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்­தப்­பட வேண்டும். எனினும் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­வரும் பத்­தி­ரிகைச் செய்தி ஒன்று தொடர்பில் விவாதம்நடத்­து­கின்­றனர். அவ்­வி­வா­தத்தின் போது பாரா­ளு­மன்­றத்தின் கோரத்­தைக்­கூட பாது­காத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. அத்­துடன் “நியூயோர்க் ரைம்ஸ்” பத்­தி­ரிகைச் செய்தி விவ­காரம் குறித்து நாள்ஒன்­றுக்கு  ஐந்து  மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­ப­டு­வ­தாக ஊடகம் ஒன்றுதெரி­வித்­துள்­ளது. எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  உட்­படஎமக்கு சேறு பூசு­வ­தற்கே குறித்த நிதியை செலவு செய்­கின்­றனர்.  மேலும்கடந்த தேர்தல் காலத்­தின்­போது தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஸ்ரீலங்காசுதந்­திரக் கட்­சிக்கு சில தரப்­பினர் நிதி வழங்­கி­யுள்­ளமை  தெரிய வரு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்

(ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்) இன்று (24.07.2018) ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்று கூடல் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் பிரேமசிறியின் தலைமையில் கொழும்பில்…

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி”  – பிரதி அமைச்சர் பைசல் காசீம்

(“புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி”  – பிரதி அமைச்சர் பைசல் காசீம்) புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள  1200 கட்டிகள்கொண்ட ஆறு மாடிக்   கட்டடங்களைத்  தடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சதி செய்கின்றார் என்று சுகாதார,போசனை மற்றும்…

மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு

(மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம்  மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சீன இராணுவத்தின் 91வது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில்…

அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி

(அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி) இலங்கைக்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரது  இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெலிநாட்டு  பணம் மற்றும் அடையால அட்டை உற்பட முக்கிய ஆவனங்கள் உள்ளடங்கிய கைப்பை  கண்டிநகரில் விழுந்திருக்கையில்  கண்டெடுத்த…