• Sat. Oct 11th, 2025

“முஸ்லிம்களை, அமைதியாக இருங்கள் என கூறக்கூடாது” – ஹஸனலி

Byadmin

Jun 15, 2017
முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நாட்டில் தற்­போது அரங்­கேற்­றப்­பட்டு வரும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் மீது நம்­பிக்கை வைத்து, உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் அமைப்­புகள் மக்­களை அமை­தி­யாக இருங்கள் என்று கூறிக் கொண்­டி­ருக்கக் கூடாது.
முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தனித்து களத்தில் இறங்கி அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.
முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் எரி­யூட்­டப்­ப­டு­கின்­றமை, பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பி­லான சமூ­கத்தின் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது பற்றி கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயல்­களை தூண்­டி­விடும் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரரை பாது­காப்பு பிரி­வி­னரால் இது­வரை தேடிக் கண்­டு­பி­டிக்க முடி­யாமற் போயுள்­ளது. நீதி­மன்­றுக்கு ஆஜ­ரா­காது பொய்க்­கா­ர­ணங்கள் கூறப்­பட்­டுள்­ளன. சுக­யீ­ன­மாக இருப்­ப­தா­கவும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டு­ள்ளதா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் இறை­யாண்மை உள்ள அர­சாங்­க­மாக காணப்­ப­ட­வில்லை.
தற்­போ­தைய அர­சாங்கம் இன­வாதம் சம்­பந்­த­மான எந்தக் குற்­ற­ங்க­ளுக்கும் நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­திலும் இந் நிலைமை நிரூ­பிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் முஸ்லிம் சிவில் அமைப்­புகள் அர­சாங்­கத்தை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் மீது நம்­பிக்கை வைக்­காது அவர்கள் கூறு­வது போன்று தொடர்ந்து பொறுமை காக்­காது தனித்து களத்தில் இறங்க வேண்டும்.
தொடர்ந்தும் பொறுமை காக்க முடி­யாது. பொறுமை இழந்தால் நடக்கும் சம்­ப­வங்­களை எவ­ராலும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமற் போகும். இவ்­வா­றான அசம்­பா­வித நிலைமை ஏற்­பட்டால் அறிக்கை விடு­ப­வர்­களும் அமை­தி­யாக இருக்­கும்­படி கூறு­ப­வர்­க­ளுமே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
வர­லாற்­றினை நோக்­கினால் தமி­ழர்­களின் போராட்­டமும் இவ்­வாறே உரு­வா­னது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களில் சர்­வ­தேச பின்­னணி உள்­ளது என பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.
இவ்­வா­றான கருத்துகள் தெரிவிப்பது அமைச்சர் சம்பிக்க ரணவக்க. இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமையும். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீரயோசித்து கருத்துகளை வெளியிட வேண்டும் என்றார்.
-ARA.Fareel –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *